டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர்: நெல்லை - திருச்சி இன்று பலப்பரீட்சை

Tnpl Nellai royal kings Trichy warriors
By Petchi Avudaiappan Jul 21, 2021 01:37 PM GMT
Report

 தமிழ்நாடு பிரீமியர் தொடரின் 3வது லீக் போட்டியில் நெல்லை - திருச்சி இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதனிடையே இன்று நடக்கும் 3வது லீக் போட்டியில் நெல்ல ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. வானிலை அறிக்கையின் படி இன்றும் மழையின் குறுக்கீடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆட்டம் எந்தவித பாதிப்பும் இன்றி நடைபெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.