நேரு, இந்திரா காந்திக்கு எழுதிய கடிதத்தில் சோழர்களின் வரலாற்று குறிப்பு - Mannar Mannan Interview
தமிழ் நாட்டின் வரலாறு பற்றி இந்திய வரலாற்றுப் பாடப்புத்தகங்களைத் தவிர வேறு பல நூல்கள் வெளியாகியுள்ளன .
அதே சமயம், சோழர்களின் வரலாற்றில் ராஜராஜ சோழனின் இடம் மிக முக்கியமானது என்றாலும், கடல் தாண்டிய அவருடைய வெற்றிகள் என்பவை இலங்கையோடு முடிந்துவிடும் நிலையில், ராஜேந்திரச் சோழன் இந்தியா மட்டுமல்லாமல், கடல் தாண்டிச் சென்று பல நாடுகளை வென்று, புதிய தலைநகரை நிர்ணயித்து தமிழர் வரலாற்றில் உன்னதமான ஓர் இடத்தைப் பெற்றவர்.
கப்பல் படைகளில் மட்டும் அல்ல மருத்துவத்திலும், அறிவியல் தொழில் நுட்பங்களிலும் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளனர். குறிப்பாக மின்சார பேட்டரியை உருவாக்கும் முறை அகஸ்திய சம்ஹிதாவில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீரை பிராணவாயு மற்றும் ஜலவாயுவாக பிரிக்கலாம் என்றுள்ளது.
[
இப்போதுள்ள பேட்டரி செல்களில் மின்சாரம் உருவாக்கும் முறையும் அகத்தியரின் முறையும் ஒத்துப் போவதாக கூறுகின்றனர். அதே போல் தற்போது நாம் ஆலயங்களில் வணங்கும் சித்தர்கள் விஞ்ஞானிகளாக இருந்துள்ளனர், ஆக நம் தமிழர்களின் அறிவியலையும் மருத்துவ தொழில்நுட்பத்தையும் விளக்குகின்றது சுவடுகள் நிகழ்ச்சி
.குறிப்பாக சோழர்களின் கப்பற்படை குறித்து ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திராவுக்கு கடிதம் எழுதியுள்ளரா ? வாருங்கள் இதற்கான பதில்களை கூறுகின்றார் மன்னர் மன்னன் சுவடுகள் நிகழ்ச்சியில்