நீட் தேர்வை ரத்து செய்யுங்கள். இப்போது நுழைவு தேர்வும் வேண்டாம்.. பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கொரோனா தொற்று காரணமாக பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்ததுபோல், நீட் மற்றும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மு.க ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்:
கடந்த 4-ம் தேதியன்று, கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்திலும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளோம்.
இந்த முடிவு மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ள முதல்வர்.
எந்தக் காரணத்துக்காக நாடு முழுவதும் பிளஸ் 2 தேர்வை ஒத்திவைத்திருக்கிறோமோ, அதே போல் நீட் உள்ளிட்ட அனைத்து தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்வதற்கும் வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், தமிழகம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில்முறைக் கல்வியிலும் மாணவர் சேர்க்கையை பிளஸ் 2 அடிப்படையிலேயே நடத்த அனுமதிக்க வேண்டும்.
I've written to @PMOIndia urging him to cancel the conduct of NEET and all other national level entrance exams, keeping in mind the safety of the students, as the reasons for cancelling the class XII board exams are equally applicable to entrance exams as well. pic.twitter.com/It2ngW55r2
— M.K.Stalin (@mkstalin) June 5, 2021
எங்கள் பக்கம் உள்ள நியாயத்தை உணர்ந்து தமிழகத்துக்கு சாதகமாக முடிவெடுப்பீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.