நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது - ஆளுநர்

R. N. Ravi Governor of Tamil Nadu TN Assembly Tamil Nadu Legislative Assembly
By Thahir Jan 09, 2023 05:19 AM GMT
Report

சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

ஆளுநர் தனது உரையை வணக்கம் கூறி தமிழில் தொடங்கினார். அப்போது திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநர் உரைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ஆளுநர் உரைக்கு எதிராக தமிழ்நாடு வாழ்க என கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஆளுநர் உரை 

இதை தொடர்ந்து ஆளுநர் தனது உரையை ஆற்றினார். அப்போது நீட் தேர்வு மாநில உரிமையை பறிக்கும் வகையிலும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளது.

neet-exemption-bill-is-pending-for-president-

நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது.

தொழிற்துறையின் தற்கால தேவைக்கேற்ப ஐடிஐ-களில் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வளர்ந்த நாடுகளை போல தமிழகத்திலும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கை பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

பெரியார் நினைவு சமத்துவபுர திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.15,000 கோடி செலவில் குடிநீர் வினியோகத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

149 சமத்துவபுரங்களை புதுப்பிக்க ரூ.190 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.    

500 மின்சார பேருந்துகள் வாங்கப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் அருகே துணை நகரம் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழடி அருங்காட்சிகம் போன்று பொருநை அருங்காட்சியகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.