நீட் தேர்வுக்கு கட்டாயப்படுத்திய தாயை கொன்ற மகள்!! அதிர்ச்சி சம்பவம்!
மும்பையில் டாக்டருக்கு படிக்க விருப்பம் இல்லாத மாணவியை நீட் தேர்வுக்கு தயாராக சொல்லி கட்டாயப்படுத்தியதால் ஆத்திரத்தில் தாயின் கழுத்தை நெறித்து கொலை செய்த மகளின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் ஒரு தம்பதியினருக்கு 15 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த தம்பதியினர் தங்களின் மகளை மருத்துவ படிப்பை படிக்க வைக்க வேண்டும் என கனவு கண்டு கொண்டிருந்தனர்.
ஆனால் மகளுக்கோ மருத்துவம் படிப்பதில் துளிக்கூட ஆசை இல்லை. இதனை மீறி மகளை நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டுள்ளனர்.
இதனால் மனமுடைந்தே காணப்பட்ட சிறுமி போலீசில் புகார் எல்லாம் அளித்துள்ளார். ஆனாலும் மனம் மாறாத பெற்றோர் மருத்துவராக வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மகள் தாயை கீழே தள்ளி முட்ட வைத்து பெல்டால் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்
சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.