நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை

Sucide Exam Student Ariyalur NEET
By Thahir Sep 14, 2021 03:54 AM GMT
Report

நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. அவரது மனைவி ஜெயலெட்சுமி. இருவரும் வழக்கறிஞர்கள் ஆவர்.

நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை | Neet Exam Student Sucide Ariyalur

இவர்களுக்கு இரண்டு மகள் உள்ளனர். இரண்டாவது மகள் கனிமொழி, நாமக்கல் கீரீன் கார்டனில் 12 ஆம் வகுப்பில் 562.28 மதிப்பெண் பெற்று 93 சதவீதம் முடித்த நிலையில் தஞ்சாவூரில் தாமரை இன்டர் நேஷனல் பப்ளிக் பள்ளியில் நீட் தேர்வை எழுதியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை மாணவி கனிமொழி துளாரங்குறிச்சியில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். நீட் தேர்வு தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.