அரியலூரில் நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை..!

Tamil nadu NEET
By Thahir Jul 16, 2022 03:46 AM GMT
Report

அரியலூரில் நீட் தேர்வு தோல்வி பயத்தில் நிஷாந்தினி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி தற்கொலை

அரியலூர் மாவட்டம் ரயில்வே காலனி தெருவைச் சேர்ந்தவர் நடராஜனின் மகள் நிஷாந்தினி, 12-ஆம் பொதுத் தேர்வில் 430 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த அவர், நாளை நீட் தேர்வு எழுதவிருந்த நிலையில் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அரியலூரில் நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை..! | Neet Exam Fear Student Suicide

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட மாணவி நிஷாந்தினி, நீட் தேர்வை இரண்டாவது முறையாக எழுதத் தயாராகி வந்துள்ளார்.

இந்நிலையில், மாணவி தன் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.