நீட் எதிர்ப்பு போராட்டம்....உண்ணாவிரதத்தை துவங்கிய திமுகவினர்
மதுரையில் இன்று நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் திமுகவினர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
நீட் தேர்வு போராட்டம்
தமிழகத்தில் பலரின் கோரிக்கையாகியுள்ள நீட் தேர்வு ரத்து குறித்தான போராட்டங்கள் அண்மையில் மாணவர் ஜெகதீஸ்வரனின் தற்கொலை பிறகு மீண்டும் சுறுசுறுப்பாகி உள்ளது. கடந்த 20-ஆம் தேதி திமுகவின் சார்பில் ஒரு நாள் உண்ணவிரத போராட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்பட்டது.
இதில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, மா.சுப்ரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் போன்றோர் சென்னை வள்ளுவர் கூட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மதுரையில் போராட்டம்
தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட இந்த போராட்டம் மதுரை மாநகரில் மட்டும் நடத்தப்படவில்லை. மதுரையில் 20-ஆம் தேதி அதிமுகவின் மாநில மாநாடு நடந்த நிலையில், வேறொரு தேதியில் நடத்தப்படும் என ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று, திமுகவின் மதுரை மருத்துவரணி, மாணவரணி, இளைஞரணி ஆகியவற்றின் சார்பில் தற்போது போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.