100 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் .. கொண்டாடும் தேசம் ..தங்கமகனுக்கு குவியும் வாழ்த்துக்கள்!
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நிராஜ் சோப்ராவுக்கும் ரூ.6 கோடி பரிசு ஹரியானா அரசு அறிவித்துள்ளது மேலும், கிரேடு 1 இல் அரசு பணியும் வழங்கப்படும் எனவும் பஞ்ச்குலாவில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பான மையத்தை நாங்கள் உருவாக்குவோம்.
அங்கு அவர் விரும்பினால் அவர் தலைவராக இருப்பார் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார். தங்க மகன் நிராஜ் சோப்ராவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இது வரலாறு காணாத வெற்றி உங்கள் திறமையால் இந்த தங்கம் கிடைத்துள்ளது. பல தடைகளை உடைத்து வரலாற்றை உருவாக்கி உள்ளீர்.உங்களின் முதல் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்க பதக்கத்தை பதக்கத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்தீர்கள். உங்கள் சாதனை எங்கள் இளைஞர்களை ஊக்குவிக்கும். இந்தியா மகிழ்ச்சியடைகிறது! மனமார்ந்த வாழ்த்துக்கள்என்று தெரிவித்துள்ளார்.
Unprecedented win by Neeraj Chopra! Your javelin gold breaks barriers and creates history. You bring home first-ever track and field medal to India in your first Olympics. Your feat will inspire our youth. India is elated! Heartiest congratulations: President Ram Nath Kovind pic.twitter.com/D5Hp52pz0y
— ANI (@ANI) August 7, 2021
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், டோக்கியோவில் வரலாறு நம் எழுதப்பட்டது. நீரஜ் சோப்ராவின் இன்றைய சாதனை நம் தேச வரலாற்றில் என்றென்றும் நினைவில் இருக்கும்.இளம் வீரர் நீரஜ் சோப்ரா விதிவிலக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
அவர் குறிப்பிடத்தக்க ஆர்வத்துடன் விளையாடி, இணையற்ற திறமையைக் காட்டினார். தங்கம் வென்ற அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
History has been scripted at Tokyo! What Neeraj Chopra has achieved today will be remembered forever. The young Neeraj has done exceptionally well. He played with remarkable passion and showed unparalleled grit. Congratulations to him for winning the Gold: PM Narendra Modi pic.twitter.com/L46HrDOogk
— ANI (@ANI) August 7, 2021
டோக்கியோவில் தங்கத்தை தட்டிய தலைமகன் நீராஜ் சோப்ராவினை பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து பதிவில், இந்திய விளையாட்டுத்துறையில் மறக்க முடியாத ஒருநாள். கோடிக்கணக்கானோரின் இதயத்தில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளீர்கள்; உண்மையான தேசிய ஹீரோஎனக் குறிப்பிட்டுள்ளார்.
A remarkable day in the history of Indian Sports. My heartiest congratulations to @Neeraj_chopra1 for ending the 120 year wait of India to win an #Athletics #Gold medal in #Olympics. You've instilled a new sense of hope in a billion hearts. You are truly a #NationalHero. pic.twitter.com/QXAvOxKEgO
— M.K.Stalin (@mkstalin) August 7, 2021