100 ஆண்டுகளுக்குப் பிறகு தங்க பதக்கம் - வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா

Olympics Tokyo2020 neerajchopra firstgold javlin
By Irumporai Aug 07, 2021 12:21 PM GMT
Report

ஈட்டியை எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா 87.58 மீ ஈட்டி எறிந்து நீராஜ் சோப்ரா தங்க பதக்கத்தை வென்றார் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதி சுற்று போட்டியில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கிய ஈட்டியை எறிதல் இறுதிப்போட்டியில், நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.

முதல் சுற்றில் 87.03 மீ தூரமும், இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்தார். இப்போட்டியின் மூன்றாவது சுற்றில் 76.79 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தொடர்ந்து முதலிடத்தை பிடித்து தங்கபதக்கத்தை வென்றார்.

இந்தியா 100 ஆண்டுகளுக்குப் பிறகு தடகளத்தில் தங்க பதக்கம் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார் நீரஜ் சோப்ராசுதந்திரத்துக்கு பின்னர் தடகளத்தில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

அதே போல தனி நபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா படைத்திருக்கிறார். முன்னதாக அபினவ் பிந்த்ரா 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது

நீராஜ் சோப்ரா யார்:

ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில் உள்ள காந்த்ரா கிராமத்தை சேர்ந்தவர் நீரஜ் சோப்ரா   1997இல் பிறந்த இவர் தனது  12 வது வயதில் 90 கிலோ உடல் எடையுடன் இருந்திருக்கிறார்.

 உடல் எடையினை குறைப்பதற்காக ஈட்டி எறிதல் விளையாட்டில் பயிற்சி பெறத் தொடங்கிய நீராஜுக்கு ஈட்டி எரிதல் பிடித்து போக அதுவே அவருக்கு தனி அடையாளத்தை கொடுத்தது  தொடக்கத்தில் உள்ளூர் போட்டிகளில் அசத்திய நீராஜ்  தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

2016-இல் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றதன் மூலம் தனது பதக்க வேட்டையை தொடங்கிய நம்ம நீராஜ் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், காமன் வெல்த், ஆசிய விளையாட்டுகள் மாதிரியான முக்கிய போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.

அதே சமயம் சில மாதங்கள் காயம் காரணமாக அவர் விளையாடாமல் இருந்த  நிலையில் தனது விடா முயற்சியின் மூலம் தற்போது தங்க மகனாக வளம் வருகிறார் .

ஒரு முறை நீராஜ் ஒரு பேட்டியின் போது  பதக்கம் வெல்ல வேண்டும் என எல்லாரிம்  சிந்திக்கிறார்கள்.  ஆனல் நான் விளையாடும்போது எசரியாக விளையாடி துல்லியமாக ஈட்டியை எறிய வேண்டும் என நினைப்பேன்.எனது நோக்கத்தை அடையும்போது அதில் கிடைக்கும் வெற்றிக்கான போனஸ்தான் பதக்கங்கள் என கூறியிருந்தார் நீராஜ் அதனால் தற்போது 100 வருட கனவை நிறைவேற்றி வாகை சூடியுள்ளார் தங்க மகன் நீராஜ்.