நீரஜ் என்று பெயர் கொண்டவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்
கரூரில் நீரஜ் என்று பெயர் வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டையுடன் வந்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என தனியார் பெட்ரோல் பங்க் உரிமையாளர் 3 நாட்களுக்கு சலுகை அறிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா பெருமை சேர்த்துள்ளார்.
அவருக்கு நன்றி தெரிவிக்கு விதமாகவும், பாராட்டும் விதமாகவும் கரூரில் திருமாநிலையூர் உள்ள தனியார் (அரவிந்த் ஏஜென்ஸீஸ்) பெட்ரோல் பங்கில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அதில் நீரஜ் என பெயர் வைத்திருப்பவர்கள் தங்களுடைய ஆதார் அட்டையுடன் பெட்ரோல் பங்கிற்கு வருகை தந்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சலுகை இன்று முதல் 3 நாட்கள் வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை பலரும் பார்த்த வண்ணம் செல்கின்றனர்.
நேற்று காலை முதல் இன்று வரை ஒருவர் கூட நீரஜ் என்று பெயர் கொண்டவர்கள் வரவில்லை என பெட்ரோல் பங்க் பணியாளர்கள் தெரிவித்தனர்.