காமன்வெல்த் போட்டியிலிருந்து நீரஜ் சோப்ரா விலகல் - நடந்தது என்ன?

India
By Nandhini Jul 26, 2022 09:56 AM GMT
Report

காமன்வெல்த் விளையாட்டு

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி, வரும் 28ம் தேதி, இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற உள்ளது. இப்போட்டி வரும் 28ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 8ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

காமன்வெல்த் போட்டிகளில் சுமார் 72 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. இப்போட்டியில், தடகளம், பேட்மின்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட் உள்ளிட்ட 19 போட்டிகளும், 8 பாரா விளையாட்டுகளும் இடம்பெறுகின்றன. சுமார் 6,500 வீரர்கள் மற்றும் குழு நிர்வாகிகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

காமன்வெல்த் போட்டியிலிருந்து நீரஜ் சோப்ரா விலகல் - நடந்தது என்ன? | Neeraj Chopra Commonwealth Games

நீரஜ் சோப்ரா விலகல்

இந்நிலையில் காமன்வெல்த் விளையாட்டிலிருந்து இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா விலகி இருக்கிறார். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கடந்த 24-ம் தேதி அமெரிக்காவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.

உலக சாம்பியன்ஷிப் தொடரின் போது காயம் ஏற்பட்டதால், காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலிருந்து விலகுவதாக நீரஜ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.