டைமண்ட் லீக் தொடர்; முதன் முதலாக சாம்பியன் பட்டம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ரா

By Nandhini Sep 09, 2022 10:21 AM GMT
Report

டைமண்ட் லீக் தொடரில் முதன் முதலாக சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா வென்றுள்ளார். 

டைமண்ட் லீக் சாம்பியன் பட்டத்தைச் தட்டித் தூக்கிய நீரஜ் சோப்ரா

சுட்சர்லாந்து நாட்டின் சுரிட்ச் நகரில் டைமண்ட் லீக் தளகள போட்டிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.

தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அவர் 88.44 மீ தூரம் வரை ஈட்டியை எறிந்து டைமண்ட் லீக் சாம்பியன் பட்டத்தைச் தட்டிச் சென்றுள்ளார்.

இதன் மூலம், டைமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்கிற மாபெரும் சாதனை படைத்துள்ளார்.

தற்போது நீரஜ் சோப்ராவிற்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்பட பலர் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Neeraj Chopra