நயன் - விக்னேஷ் சிவன் குழந்தை விவகாரம்.. பாய்கிறதா சட்ட நடவடிக்கை ?
விக்னேஷ் சிவன் குழந்தை விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
விக்னேஷ் நயன் குழந்தைகள்
பிரபல நடிகையான நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து 4 மாதங்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் சில தினங்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக தங்களது சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்ட்னர்.
தமிழ் சினிமா பிரபலங்களில் முதல்முறையாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி வாடகை தாய் மூலம் முதல்முறையாக குழந்தைப் பெற்று கொண்டுள்ளது. இது ரசிகர்களிடையே விவாதமாக மாறியுள்ளது. இதில் விதிமீறல் இருப்பதாக சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அமைச்சர் பதில்
இந்த நிலையில் , மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகை தாய் மூலம் விதிகளை பின்பற்றி குழந்தை பெற்றுக்கொண்டார்களா என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் தான், விதிமீறல் இருக்கிறதா என்பது கண்டறியப்படும். அதன் பின்னர் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.