திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விக்கி - நயன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட் - வெளியான தகவல் - வாயடைத்த ரசிகர்கள்
கடந்த 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் கோலாகலமாக நடந்தது.
நயன்தாரா - விக்னேஷ்
திருமணம் 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்களது கணவன், மனைவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்கள். இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் தாலியை எடுத்து விக்னேஷ் சிவன் கையில் கொடுக்க, 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார்.
பிரபலங்கள் பங்கேற்பு
இத்திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித், கலா மாஸ்டர், விஜய்சேதுபதி, நெல்சன், அனிருத், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டனர். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
புகைப்படங்கள் வைரல்
திருமணத்தின் புகைப்படங்களை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். அந்த புகைப்படங்கள் இணையத்தை சுற்றி வலம் வந்தது. ரசிகர்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு டுவிட்டர், இன்ஸ்டா, தனது செல்போனில் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அன்னதான விருந்து
திருமண நாளன்று தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர் இல்லம் மற்றும் முதியோர் இல்லங்களில் உள்ள 1 லட்சம் பேருக்கு இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டது. புதுமணத் தம்பதியின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் இணையத்தில் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
அசைவ உணவு விருந்து
விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் அசைவ பிரியர்கள். ஆனாலும், இவர்களது திருமணத்தில் சுத்த சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டன. திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றதால் அவர்கள் அசைவ உணவை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது.
விருந்தினர்களுக்கு கிஃப்ட்
தற்போது சமூகவலைத்தளங்களில் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு நயன் - விக்கி கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக திருமணத்திற்கு வருவபவர்களுக்கு தேங்காய், பழம், ஸ்வீட் தான் கொடுக்கப்படும். ஆனால் நயன்-விக்கி திருமணத்தில் வந்தவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கிஃப்ட்டாக கொடுக்கப்பட்டதாம். இத்தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் வாயடைத்து போயியுள்ளனர்.