சிவப்பு சேலையில் தேவதையாய் நடந்து வந்த நயன்தாரா - வைரலாகும் புகைப்படம் - தெறிக்க விடும் ரசிகர்கள்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
நயன்தாரா - விக்னேஷ் திருமணம்
7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் இன்று தங்களது கணவன், மனைவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்கள். இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. இன்று காலை 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார்.
பிரபலங்கள் பங்கேற்பு
இந்த திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் அனிருத், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்றனர். மேலும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உள்ளனர். திருமணத்தில் செல்போன்களுக்கு அனுமதியில்லை என பல்வேறு பலத்த கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
வைரலாகும் புகைப்படம்
தற்போது திருமண குறித்த புகைப்படம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில், சிவப்பு சேலையில் தேவதையாக நயன்தாரா நடந்து வரும் புகைப்படமும், ராஜ உடையில் விக்னேஷ் சிவன் நடந்து வரும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை கூறி தெறிக்க விட்டு வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம் -
??? #WikkiNayanWedding #WikkiNayan pic.twitter.com/TeDrKDdxj8
— Nayanthara✨ (@NayantharaU) June 9, 2022