விசாரணை வளையத்தில் நயன், விக்கி...நாளை மாலை விசாரணை அறிக்கை வெளியீடு - மா.சுப்பிரமணியன் தகவல்

Nayanthara Ma. Subramanian Vignesh Shivan
By Nandhini Oct 25, 2022 12:15 PM GMT
Report

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும் என்று தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா - விக்னேஷ்

சிவன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார்.

சலசலப்பில் தமிழ் சினிமாத்துறை

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்ட சம்பவம், தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறியுள்ளது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சில சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. ஆனால் நடிகை நயன்தாரா இந்த விசயத்தில் அனைத்து விதிகளையும் மீறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது.

nayanthara - Ma. Subramanian

விதிமீறல் உறுதி

நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரத்தில் விதி மீறப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஓரிரு நாளில் அறிக்கை வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில் - வாடகைத்தாய், இரட்டை குழந்தை விவாகரத்தில் மருத்துவமனையில் நிர்வாகம் விதிகளை மீறி இருப்பது உறுதியாகி இருக்கிறது. நடத்தப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் விளக்கம் திருப்திகரமாக இல்லை. இதனால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சட்டம் அமல்படுத்துவதற்கு முன்பாகவே தம்பதி சிகிச்சை பெற்றிருப்பின், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கக்கூடிய சட்டத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீறி இருக்கிறதா என்பது குறித்து விசாரிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருமணம் நடப்பதற்கு முன்பாக வாடகை தாய் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சட்டப்படி நடவடிக்கை பாயும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

விசாரணை அறிக்கை வெளியீடு

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றது தொடர்பாக, விசாரணை அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.