நயன்தாராவின் இரட்டை குழந்தைக்கு வாடகைத்தாய் யார்ன்னு தெரியுமா? - வெளியான பரபரப்பு தகவல்...!
நயன்தாராவின் இரட்டை குழந்தைக்கு வாடகைத்தாய் இவர்தான் என்று தற்போது சமூகவலைத்தளங்களில் தகவல் தீயாய் பரவி வருகிறது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார்.
சலசலப்பில் தமிழ் சினிமாத்துறை
திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்ட சம்பவம், தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறியுள்ளது.
இதனையடுத்து, அந்த வாடகைத்தாய் பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் திருமணத்திற்கு முன்பே இதற்காக திட்டமிட்டு கருமுட்டை, உயிரணு ஆகியவற்றை சென்னையிலிருக்கும் பிரபலமான மருத்துவர்கள் மூலம் வாடகைதாய்க்கு செலுத்தியுள்ளதாகவும், குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதால், மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
வாடகைத்தாய் இவர்தானாம்...?
இது ஒரு புறம் இருக்க, தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளுக்கு வாடகை தாயாக இருந்தவர் இவர்தான் என்ற தகவல் தற்போது கசிந்திருக்கிறது.
அந்த வாடகைத்தாய் கேரளாவை சேர்ந்தவராம். அதுவும் அவர் நயன்தாராவின் உறவினராம். ஆனால் நயன்தாராவிற்கு எந்த முறையில் உறவினர் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
மேலும், வாடகை தாயாக இருக்க அனைத்து தகுதிகளும் உள்ளதாக மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்த பிறகு தான், அதற்கான செயல்பாடுகளை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் துவங்கியதாக சொல்லப்படுகிறது.

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
