குறை பிரசவத்தில் பிறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தைகள்? - வெளியான ரகசியத் தகவல்...!
நயன்தாரா - விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தைகள் குறித்து தற்போது ரகசியத் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
விக்னேஷ் சிவன் டுவிட்
திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், நேற்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அந்த பதிவில், இரட்டை குழந்தைக்கு நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று புகைப்படத்தோடு வெளியிட்டார். மேலும், பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்காக வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இரட்டை குழந்தைகள்
தற்போது திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாடகைத்தாய் பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் திருமணத்திற்கு முன்பே இதற்காக திட்டமிட்டு கருமுட்டை, உயிரணு ஆகியவற்றை சென்னையிலிருக்கும் பிரபலமான மருத்துவர்கள் மூலம் வாடகைதாய்க்கு செலுத்தியுள்ளனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் இரட்டைக் குழந்தைகளாக பிறந்திருப்பது நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தாலும் குழந்தைகள் 8 மாதத்தில் பிறந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மருத்துவர்களின் கண்காணிப்பில் குழந்தைகள் வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.