நயன்தாரா திருமணம் குறித்து சீமான் பரபரப்பு பேட்டி...!

Nayanthara Seeman Vignesh Shivan
By Nandhini Jun 15, 2022 06:03 AM GMT
Report

கடந்த 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் கோலாகலமாக நடந்தது.

நயன்தாரா - விக்னேஷ்

திருமணம் 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்களது கணவன், மனைவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்கள். இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் தாலியை எடுத்து விக்னேஷ் சிவன் கையில் கொடுக்க, 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார்.

பிரபலங்கள் பங்கேற்பு

இத்திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித், கலா மாஸ்டர், விஜய்சேதுபதி, நெல்சன், அனிருத், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டனர். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

மறுவீடு சென்ற விக்னேஷ்

திருமணம் முடிந்த நிலையில் மாப்பிள்ளை விக்னேஷ் தனது மனைவி நயன்தாராவுடன் தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். கேரளா மாநிலம் சென்ற விக்னேஷ் - நயன்தாரா ஜோடியை உறவினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். கேரளா பாரம்பரிய உடையில் விக்னேஷ் சிவன் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

நயன்தாரா ஹனிமூன் எங்கு செல்ல இருக்கிறார். அவருடைய திருமணத்தை வியாபாரம் செய்தார்களா? அவர் செருப்பு போட்டு கோவில்களுக்கு செல்கிறாரா? இல்லையா? என்று இணையத்தளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. 

நயன்தாரா திருமணம் குறித்து சீமான் பரபரப்பு பேட்டி...! | Nayanthara Vignesh Shivan Seeman

சீமான் பேட்டி

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

தொலைக்காட்சிகளில் விவாதம் என்ன நடக்கிறது? நயன்தாரா திருமணம் வியாபாரமா அல்லது திருமணமா என்று. என்னிடமே ஒருத்தர் வந்து கேட்டார். நயன்தாரா திருமணம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று? அதற்கு நான் அட... நீ என்னப்பா... வேறு எதாவது கேள்விய கேளப்பான்னு சொன்னேன்

இங்கு எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் போற்றப்படுவது கிடையாது. தேவநேயப் பாவாணர் எம்.ஜி.ஆர் நடத்திய உலக தமிழர் மாநாட்டில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் பேச்சை யாரும் கவனிக்காமல் கூட்டத்திலிருந்து கலைந்து சென்றனர். அந்த கூட்டம் கலைந்து போன மன வலியில்தான் அவர் இறந்தே போனார். அந்த நிலை தான் இது என்றார்.