இவரை ஏன் கல்யாணுத்துக்கு வரவழைச்சாங்க...? நயன்தாரா மீது கோபத்தில் ரசிகர்கள்
கடந்த 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் கோலாகலமாக நடந்தது.
நயன்தாரா - விக்னேஷ் திருமணம்
7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்களது கணவன், மனைவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்கள். இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் தாலியை எடுத்து விக்னேஷ் சிவன் கையில் கொடுக்க, 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார்.
பிரபலங்கள் பங்கேற்பு
இத்திருமணத்தில் பாலிவுட்சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித், கலா மாஸ்டர், விஜய்சேதுபதி, நெல்சன், அனிருத், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டனர். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மறுவீடு சென்ற விக்னேஷ்
திருமணம் முடிந்த நிலையில் மாப்பிள்ளை விக்னேஷ் தனது மனைவி நயன்தாராவுடன் தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். கேரளா மாநிலம் சென்ற விக்னேஷ் - நயன்தாரா ஜோடியை உறவினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். கேரளா பாரம்பரிய உடையில் விக்னேஷ் சிவன் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
தாய்லாந்தில் ஹனிமூன்
தாய்லாந்தில் உள்ள பிரபல சியாம் ஓட்டலில் இருவரும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு தாய்லாந்தில் இருவரும் இருப்பார்கள் என்றும், திரும்பி வந்ததும் தங்களது திரைப் பயணத்தில் பிஸியாகி விடுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நயன்தாரா மீது ரசிகர்கள் கோபம்
பிரபல மலையாள நடிகையை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரபல நடிகர் தீலிப் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீனில் வெளியே வந்தார். தற்போது அந்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஜூன் 9ம் தேதி நயன்தாராவின் திருமணத்தில் நடிகர் திலீப் வந்ததை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோபமடைந்த ரசிகர்கள் நயன்தாரா எதற்காக நடிகர் திலீப்பை அழைக்க வேண்டும் என்று சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். என்னதான் நயன்தாரா கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும், இப்படிப்பட்ட நபரை எதற்கு அழைக்க வேண்டும் என்று கோபத்தில் கமெண்ட் வருகின்றனர்.