விக்னேஷ் சிவனுக்கு 3-வது திருமணம்...? - வெளியான தகவல்.... - ஷாக்கான ரசிகர்கள்...!
விக்னேஷ் சிவனுக்கு 3-வது திருமணம் நடைபெற இருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார். இந்த விவகாரம் சினிமாத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்-விக்கி
சமீபத்தில் நடிகை நயன்தாராவும், கணவர் விக்னேஷ் சிவனும் தன் இரு மகன்களுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை கொண்டாடினர். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.
பறிபோன வாய்ப்பு
சமீபத்தில் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்தார் விக்னேஷ் சிவன். ஏகே 62 கை நழுவிப் போனதையடுத்து, எப்படியாவது ஒரு தரமான படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
தன் கூட்டணியில் ஒரு புதிய மாற்றத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார். ‘லவ் டுடே ’ படத்தின் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரெங்கநாதனை தன் படத்தில் இணைத்துக் கொண்டுள்ளாராம். படத்தில் பிரதீப் ரெங்கநாதன் நடிக்கப் வைக்கப்போவதாக 90% பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளதாம். ஒரு பக்கம் விஜய்சேதுபதி, ஒரு பக்கம் பிரதீப் ரெங்க நாதன் என தன் பலத்தை அதிகப்படுத்த இருக்கிறார் விக்னேஷ்சிவன்.
விக்னேஷ் சிவனுக்கு 3-வது திருமணம்...?
இதற்கிடையில், இவர்கள் திருமணம் நடந்த நேரம் சரியில்லை என்று ஜோதிடர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இதனால்தான், அடுத்தடுத்து விக்னேஷ் சிவனுக்கு சரிவு ஏற்பட்டு வருகிறதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே தோஷம் என்பதால் முதலில் வாழை மரத்திற்கு தாலி கட்டி 2-வது முறையாக நயன்தாராவுக்கு கட்டிய விக்னேஷ் சிவன் அடுத்து 3-வது முறையாக மீண்டும் நயன்தாரா கழுத்தில் தாலி கட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.