தன் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய நயன் - விக்கி - வைரலாகும் புகைப்படம் - ரசிகர்கள் மகிழ்ச்சி...!

Nayanthara Vignesh Shivan
By Nandhini Oct 25, 2022 06:42 AM GMT
Report

தன் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய நயன் - விக்கி புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தீபாவளி பண்டிகை நாடு

முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.வண்ண, வண்ண உடைகள் உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து உலகம் முழுவதும் தீபாவளியை மக்கள் சிறப்பாக கொண்டாடினர். கடந்த சில வாரங்களாக தீபாவளியையொட்டி கடைகளில் பட்டாசு விற்பனையும், புத்தாடை விற்பனையும் சூடு பிடித்தது. துணி கடைகளில் மக்கள் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார்.

சலசலப்பில் தமிழ் சினிமாத்துறை

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்ட சம்பவம், தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறியுள்ளது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சில சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. ஆனால் நடிகை நயன்தாரா இந்த விசயத்தில் அனைத்து விதிகளையும் மீறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது.

விசாரணை வளையத்தில் நயன்-விக்கி

இந்த விவகாரம் குறித்து தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அவர்களிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டிருக்கிறது. இது குறித்த விசாரணை அறிக்கை பெற்றவுடன் அதில் விதிமீறல் இருக்கிறதா, முரண்பாடு இருக்கிறதா? என்பதை கண்டறிந்து அதற்கேற்ற சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்துள்ளார். 

nayanthara - vignesh

தீபாவளி கொண்டாடிய நயன் - விக்கி

நயன்தாரா நேற்று தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

நேற்று கையில் இரட்டை குழந்தையுடன் நயன்தாராவும், விக்னேஷ் சிவன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அந்தப் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது. 

இந்நிலையில், தற்போது நயன்தாரா தன் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடிய புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.