சின்ன குழந்தை போல யானைக்கு வாழைப்பழம் கொடுக்க பயந்த நடிகை நயன்தாரா..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும்,இயக்குநர் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் அண்மையில் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.
நடிகை நயன்தாரா கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பபேஷ்வரர் ஆலயத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனம் முடிந்தவுடன் மங்களம் யானையிடம வாழைப்பழம் கொடுத்து அசி பெற்றார். அப்போது யானைக்கு வாழைப்பழம் கொடுப்பதற்கு நடிகை சின்ன குழந்தை போல் பயந்த காட்சி அங்கிருந்தவர்களை ஆச்சரியம் அடைய வைத்தது.