ஒத்த புகைப்படத்தால் ரசிகர்களை கிரங்கடித்த நயன்தாரா..!
விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள நயன்தாராவின் புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்களை கிரங்கடித்துள்ளது.
காதல் திருமணம்
இந்த நிலையில் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.
7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா கடந்த ஜுன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
ஹனிமூன்
திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து நாட்டிற்கு தேனிலவுக்காக சென்றனர். பின்பு அங்கிருந்து புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார் விக்னேஷ் சிவன்.
பின்னர் இந்தியா திரும்பிய இருவரும் திரைப்பட வேலைகளில் பிசியாகின. நயன்தாரா ஜவான் திரைப்பட படப்பிடிப்புக்காக மும்பை சென்ற நிலையில் சென்னை திரும்பினார்.
செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு நிகழ்ச்சி
திருமணத்திற்கு பின்பு, நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது திரைப்படத்தை இயக்க தயாராகி வருகிறார்.
இதனிடையே விக்னேஷ் சிவனுக்கு, சென்னையில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் தொடக்க விழாவை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக அமைந்ததால், ரஜினி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஒத்த புகைப்படத்தால் கிரங்கி போன ரசிகர்கள்
திருமணம் முடிந்த பிறகு ஒரு சில தினங்களுக்கு முன்னாள் நயன்தாரா விக்னேஷ் சிவன் இரண்டாவது முறையாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர்.
முதல் முறையாக தாய்லாந்து நாட்டிற்கு சென்ற போது தங்கள் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.
அதே போல் இந்த முறையும் விக்னேஷ் ஸ்பெயின் நாட்டில் ஹோட்டல், பேருந்து மற்றும் தெருக்களில் நடந்து செல்லும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் நயன்தாராவின் புகைப்படம் ஒன்று ரசிகர்களை கிரங்கடித்துள்ளது.இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர் பலரும் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.