தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடும் நயன்தாரா..!
நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார்.
காதல்
விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.
கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் 09.06.2022 இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம்
7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா கடந்த 09.06.2022 மகாபலிபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள பார்க் ஷெரட்டன் ஸ்டார் ஓட்டலில் பிரமாண்ட கண்ணாடி அரங்கில் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார் நயன்தாரா.
மறு வீடு விருந்து
திருமணத்தில் நயன்தாரா பெற்றோர் உடல்நலக் குறைவால் பங்கேற்கவில்லை.இதனால் தன் பெற்றோரை சந்தித்து ஆசி வாங்க தன் கனவருடன் கேரளா சென்றார் நயன்தாரா.
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும் அனைவரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கேரளாவின் முக்கிய கோவில்களுக்கு தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் சென்ற நயன்தாரா சாமி தரிசனம் செய்தார்.
தாய்லாந்தில் ஹனிமூன்
தாய்லாந்தில் உள்ள பிரபல சியாம் ஓட்டலில் இருவரும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களுக்கு தாய்லாந்தில் இருவரும் இருப்பார்கள் என்றும், திரும்பி வந்ததும் தங்களது திரைப் பயணத்தில் பிஸியாகி விடுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.