தப்பித்த நடிகை நயன்தாரா…2016ல் நடந்த முதல் திருமணம் - வெளியான ஷாக் ரிப்போர்ட்
நடிகை நயன்தாரா கடந்த 2016 ஆம் ஆண்டே திருமணம் செய்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இரட்டை குழந்தை விவகாரம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா இவர் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் கடந்த ஜுன் மாதம் 9 ஆம் தேதி திரைப்பிரபலங்கள் மத்தியில் மிக பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் திருமணமாகி 4 மாதங்களிலே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். பின்னர் இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது தெரியவந்த நிலையில் இது குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
2016ல் முதல் திருமணம்
இது குறித்து விசாரணை நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று விரிவான அறிக்கையை வெளியிட்டனர். நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி ICMR வழிகாட்டு முறைகளின்படியே இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி பதிவு திருமணம் நடைபெற்றதாகவும், பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.
அத்திருமண பதிவு சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவு துறையால் உறுதி செய்யபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.