குழந்தைக்கு அம்மாவாகும் நயன்தாரா - மகிழ்ச்சியில் விக்னேஷ் சிவன் குடும்பம்
நடிகை நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்துள்ளதால் விக்னேஷ் சிவனும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜவான் படப்பிடிப்பில் நயன்தாரா
மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ள காட் ஃபாதர் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடித்த இப்படம் வெற்றி பெற்றுள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளாராம் நயன்தாரா.
தற்போது ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் ஜவான் திரைப்படத்திலும், ஜெயம் ரவியுடன் இணைந்து இறைவன் படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார்.
கணவர் குடும்பத்தினர் மகிழ்ச்சி
இந்த நிலையில் புதிய படங்களில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறாராம். தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தி ரௌடி பிக்சர்ஸ் சார்பாக திரைப்படங்களை தாயரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறாராம்.
நயன்தாரா இப்படி முடிவெடுத்ததற்கு காரணம் அவர் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளது தான் என்று கூறப்படுகிறது.
இவரின் இந்த முடிவால் கணவர் விக்னேஷ் சிவனின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.