விதியை மீறி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா ? : விளக்கம் கேட்கும் தமிழக அரசு

Nayanthara Vignesh Shivan
By Irumporai Oct 10, 2022 09:01 AM GMT
Report

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி நீண்டநாட்களாக காதலித்து வந்த நிலையில், சேர்ந்தும் வாழ்ந்து வந்தனர். இதனிடையே, கடந்த ஜூன் 9ஆம் தேதியன்று இருவருக்கும் சென்னை அருகே திருமணம் நடைபெற்றது.

நயன் விக்கி குழந்தைகள்

இந்த நிலையில், இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரானதாக அந்த தம்பதி பதிவிட்டுள்ளனர். அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

விதியை மீறி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா ? : விளக்கம் கேட்கும் தமிழக அரசு | Nayanthara And Vignesh Shivan Says Ma Subramanian

அதேசமயம், வெறும் நான்கு மாதங்களில் எப்படி குழந்தை பிறக்கும்? வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றனரா? அல்லது தத்து எடுத்துக் கொண்டனரா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சர்ச்சையான விவகாரம்

வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்வதற்கு சில விதிமுறைகள் இருப்பதாகவும், அதனை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி மீறியிருப்பதாகவும் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், இரட்டை குழந்தை தொடர்பாக நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விளக்கம் கேட்கும் அரசு

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் விதிகளை மீறி, வாடகை தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், விதிமுறையை பின்பற்றி வாடகைத்தாய் மூலம் நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தை பெற்றனரா என பொது சுகாதாரத்துறை மூலம் விளக்கம் கேட்கப்பட்டு அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.