அம்மாவை காண கொச்சி பறந்த நயன் - விக்கி ஜோடி!
ஜூன் 9ந் தேதி மகாபலிபுரத்தில் திரைத்துறையினர் அனைவரும் வியந்து பார்த்து அளவுக்கு, 20க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் மந்திரம் ஓத தடபுடலாக திருமணம் நடந்து முடிந்தது.
திருப்பதியில் சுவாமி தரிசனம்
இவர்களது திருமணத்தில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்து மணமக்களை வாழ்த்தினர்.
திருமணம் முடிந்த கையோடு வேண்டுதலை நிறைவேற்ற நயன்தாரா விக்னேஷ் சிவனும் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர்.
கேரளா பயணம்
இதையடுத்து, நேற்று, ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன், நயன்தாரா, எங்களுக்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி.
தொடர்ந்து உங்களின் ஆதரவு எங்களுக்கு கிடைக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில், புதுமணத் தம்பதியினர், திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக கேரளா சென்றுள்ளனர். கொச்சி விமான நிலையத்தில், நயன்தாராவும் விக்கியும் நடந்து செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
நயன்தாராவின் தாயாரின் உடல்நிலை சரியில்லாததால் அவர் திருமணத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அம்மாவிடம் ஆசி பெறுவதற்காக இருவரும் கேரளா சென்றுள்ளனர்.
இன்னும் சில நாட்கள் கேரளாவில் உள்ள நயன்தாராவின் சொந்த வீட்டில் இருவரும் தங்கி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan
