4 மாதத்தில் குழந்தை...எப்படி இப்படி?அதிர்ச்சியில் ரசிகர்கள் - பதில் சொல்வாரா விக்னேஷ் சிவன்
இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்த போஸ்டால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
நயன் - விக்கி
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்த போட்டோக்களை அதிகம் வெளியிட்டிட்டு வந்தனர். அதே சமயம் தங்களது வேலைகளிலும் கவனம் செலுத்தி வந்தனர்.
தற்போது ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் ஜவான் திரைப்படத்திலும், ஜெயம் ரவியுடன் இணைந்து இறைவன் படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், புதிய படங்களில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறார் எனவும்,
இரட்டைக் குழந்தை?
தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தி ரௌடி பிக்சர்ஸ் சார்பாக திரைப்படங்களை தாயரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்பட்டது. தொடர்ந்து அவர் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில், அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக குறிப்பிட்டு போட்டோவுடன் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் திருமணமாகி 4 மாதங்களில் எப்படி குழந்தை என திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து எதுவும் விக்னேஷ் சிவன் விளக்கமளிப்பாரா எனவும் எதிர்பார்த்து காத்துள்ளனர். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்தான் இணையத்தை கலக்கி வருகிறது.