ஸ்பெயின் நாட்டில் நயன்தாரா விக்னேஷ் சிவன் - 2வது ஹனிமூனா?
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
காதல் திருமணம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜுன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
2வது ஹனிமூன்?
திருமணம் முடிந்த பின்னர் தாய்லாந்து நாட்டிற்கு ஒரு வாரம் சுற்றுலா சென்ற தம்பதியினர் சென்னை திரும்பினர். அதனை தொடர்ந்து இருவரும் தங்களது வேளைகளில் பிசியானார்கள்.
விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சியை இயக்கினார். இந்நிலையில் தற்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்கு 10 நாட்கள் தங்கிய பின்னர் மீண்டும் சென்னை திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து நயன்தாரா இந்தியில் உருவாகும் 'ஜவான்' படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாகவும், விக்னேஷ் சிவன் 'ஏகே 62' படத்திற்கான பணிகளை துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
#LadySuperstar #nayanthara heads to Spain for holiday spotted in Chennai airport yesterday pic.twitter.com/gjYTnZ7jsY
— Lalithakrishna 7176 (@Lalitha90811141) August 12, 2022