சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா.. இன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை
இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
காதல் திருமணம்
கடந்த 2015ம் ஆண்டு ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாரா நடித்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பில்தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
கடந்த 7 வருடமாக காதலித்து வந்த இவர்கள், லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். இந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் செய்துகொண்டனர்.
இரட்டை குழந்தை விவகாரம்
தம்பதிக்கு இரட்டை குழந்தை திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் திடீரென கடந்த 9ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை, தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் டிவிட்டரில் தெரிவித்தார்.
இந்த தகவல் ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இது தொடர்பாக விசாரித்ததில், வாடகை தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இன்று விசாரணை
இந்த நிலையில், இரட்டை குழந்தைகள் பெற்று கொடுத்தது எப்படி? முறையாக விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துமனை நிர்வாகத்திடம் இன்று விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறி இருப்பது அம்பலமானது. வாடகை தாய் விவகாரத்தில் விதிகளை மீறி இருப்பது உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனை மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக ஓரிரு நாளில் அறிக்கை வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.