நடிகை நயன்தாராவுக்கு திருமணம் முடிந்து விட்டதா? - வைரலாக பரவும் புகைப்படம்

nayanthara vigneshshivan ladysuperstarnayanthara
By Petchi Avudaiappan Mar 12, 2022 09:28 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்து விட்டதா என ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வியெழுப்பி வருகின்றனர். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள நயன்தாரா நானும் ரௌடி தான் படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குநரான விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். 6 வருடங்களை கடந்துள்ள இந்த காதல் எப்போது திருமணத்தில் முடியும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

காரணம் சிம்பு, பிரபுதேவா ஆகிய பிரபலங்களுடனான காதல் தோல்விகளுக்குப் பின் மீண்டும் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வலம் வந்த நயன்தாராவுக்கு இந்த காதலாவது கைக்கொடுக்க வேண்டும் என பலரும் எண்ணுகின்றனர். 

இதனிடையே நெற்றிக்கண் படத்தின் புரமோஷனுக்காக விஜய் டிவியில் தொகுப்பாளர் டிடிக்கு அளித்த பேட்டியில் தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக நயன்தாரா தெரிவித்து இருந்தார். இதனால் இந்தாண்டு அவர் திருமணம் செய்வார் என கூறப்பட்டது. 

இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. காரணம் காளிகாம்பாள் கோயிலில் வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா, சென்னை மேயர் பிரியா ராஜனை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின . 

அதில் ஒரு புகைப்படத்தில் நடிகை நயன்தாராவின் நெற்றி வகிடில் குங்குமம் இருந்தது. ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்து பல மாதங்கள் கழித்தே அவர் டிவி நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். அந்த வகையில் திருமணமும் ரகசியமாக நடந்தேறி விட்டதா என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.