பிரதமர் மோடியை தமிழக மக்கள் மனதார வரவேற்கின்றனர் - தமிழில் டுவிட் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி

R. N. Ravi Narendra Modi
By Nandhini May 26, 2022 08:06 AM GMT
Report

இன்று மத்திய அரசு துறைகள் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்ட விழா நடைபெறுகின்றது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத்திலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வர உள்ளார்.

இன்று மாலை 5.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வருகை தர இருக்கும் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்க உள்ளர்.

இதனையடுத்து, அங்கிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடி வருகையையொட்டி வழியெங்கும் அவருக்கு பா.ஜ.க.வினர் சார்பில் தாரை, தட்டப்பை முழங்க, சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கோடிக்கணக்கான ஏழைகள், விளிம்புநிலை மற்றும் இளைஞர்களுக்கு உதவிய அவரது துணிச்சலான நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்து மனதார வரவேற்கின்றனர் என தமிழில் பதிவிட்டுள்ளார்.