ஜி20 நாடுகளின் 17வது உச்சி மாநாடு - அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு...!
ஜி20 நாடுகளின் 17வது உச்சி மாநாட்டில் அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
17வது உச்சி மாநாடு
ஜி20 நாடுகளின் 17வது உச்சி மாநாடு இந்தோனேஷியாவின் பாலி நகரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நாட்டின் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய 3 முக்கிய அமர்வுகளில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
இது தவிர உலக நாடுகளின் பொருளாதாரம், எரிசக்தி சுற்றுசூழல், பாதுகாப்பு ஆகியவை குறித்தும் மற்ற நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி விவாதிக்க உள்ளார்.
அதிபர் ஜோ பைடன் - பிரதமர் மோடி சந்திப்பு
17வது ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பாலி சென்ற பிரதமர் மோடிக்கு இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ உற்சாக வரவேற்பு கொடுத்தார். இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
தற்போது இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
#PMModi with #Biden at #G20SummitBali : #PMO shares pic pic.twitter.com/FCuRIVvEcw
— DR. AMIT MANOHAR (@dramitmanohar) November 15, 2022
PM Shri @narendramodi meets with world leaders during #G20Summit in Bali, Indonesia.#G20Indonesia #G20BaliSummit @g20org#PMModi #NarendraModi #PicOfTheDay@BJP4India @BJP4Rajasthan pic.twitter.com/TA7qRl1PIN
— Ratan Dhakad (@DhakadRatan9) November 15, 2022