'ஜி7' மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி ஜெர்மனி சென்றடைந்தார் - உற்சாக வரவேற்பு
ஜெர்மனியில் இன்று, 'ஜி7' நாடுகளின் மாநாடு தொடங்குகிறது.
இந்த ஜி7 மாநாட்டில் பங்கேற்க இந்தியா, இந்தோனேஷியா, செனகல், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளை ஜெர்மனி அழைப்பு விடுத்துள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக நேற்று பிரதமர் மோடி டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த மாநாட்டில் ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் சுற்றுச்சூழல், எரிசக்தி, பருவநிலை, உணவு பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம், ஜனநாயகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளன. இந்த மாநாட்டிற்கு பிறகு ஐரோப்பாவில் உள்ள இந்திய சமூகத்தினரையும் பிரதமர் மோடி சந்திக்க இருக்கிறார்.
இந்நிலையில், 'ஜி7' மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி ஜெர்மனி சென்றடைந்தார். ஜெர்மனி விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Prime Minister @narendramodi arrives in Munich, Germany.@PMOIndia @ianuragthakur @Murugan_MoS @PIB_India @DDNewslive @airnewsalerts pic.twitter.com/G41p1ggDj4
— Ministry of Information and Broadcasting (@MIB_India) June 26, 2022