உ.பி.யில் ரூ.14,850 கோடி செலவில் மிகப் பெரிய விரைவுச் சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
Narendra Modi
By Nandhini
சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
உத்தரபிரதேச மாநிலம், சித்தரகூட மாவட்டத்திலிருந்து எட்டாலா மாவட்டம் வரை 296 கிலோ மீட்டருக்கு புந்தேல்கண்ட் விரைவு சாலை ரூ.14,850 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச் சாலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி கான்பூர் நகருக்கு விமானம் மூலம் சென்றடைந்தார். அங்கு சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு கொடுத்தனர். இதன் பிறகு, ஜலான் மாவட்டம் கைந்தேரி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை தொடங்கி வைத்தார்.