சென்னையில் நாளை மறுநாள் “நம்ம ஊரு திருவிழா”;கட்டணம் இல்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு

thangamthennarasu nammaoorufestival
By Irumporai Mar 19, 2022 09:47 AM GMT
Report

நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் விதமாக சென்னை தீவுத்திடலில் நாளை மறுநாள்(மார்ச் 21 ஆம் தேதி) நம்ம ஊரு திருவிழா நடைபெறும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

மேலும், இவ்விழாவிற்கு கட்டணம் இல்லை,அனைவரும் வரலாம் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும்

இவ்விழாவினை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார் என்றும்,கொரோனா அதிகரிப்பு,உள்ளாட்சி தேர்தல் போன்ற காரணங்களால் முன்னதாக நடைபெறாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது நடத்தப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும்,நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் பிற மாவட்டங்களில் படிப்படியாக நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலை பண்பாட்டுத்துறை,பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்க சுற்றுலாத்துறை சார்பில் ‘நம்ம ஊரு திருவிழா’ நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.