சந்திரயான் 3 வெற்றி: மகிழ்ச்சியில் 2 பேரக் குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய தாத்தா - என்ன பெயர் தெரியுமா?

Karnataka India ISRO Chandrayaan-3
By Jiyath Aug 26, 2023 07:50 PM GMT
Report

நபர் ஒருவர் தனது பேரக் குழந்தைகளுக்கு விக்ரம், பிரக்யான் என்று பெயர் சூட்டியுள்ளார்.

சந்திரயான் 3

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் (ISRO) கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

சந்திரயான் 3 வெற்றி: மகிழ்ச்சியில் 2 பேரக் குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய தாத்தா - என்ன பெயர் தெரியுமா? | Naming 2 Children Vikram And Pragyan I

இதைத் தொடர்ந்து சரியாக 5:44 மணிக்கு விண்கலத்தை தரையிறக்கும் பணிகள் துவங்கப்பட்டு பல சோதனைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக கடந்த 23ம் தேதி 6:04 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கி சாதனை படைத்தது இஸ்ரோ. நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த ஒரு நாடும் ஆய்வு செய்தது இல்லை என்ற நிலையில், இந்த சரித்திர சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது.

தற்போது விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் ஆய்வை தொடங்கியுள்ளது. விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறும் அழகிய காட்சிகளையும் இஸ்ரோ பதிவிட்டு வருகின்றனர்.

விக்ரம் - பிரக்யான்

இந்நிலையில் கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் வடகெரே பகுதியை சேர்ந்த மெய்யப்பன், சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை நினைவுகூரும் வகையிலும், இஸ்ரோ விஞ்ஞானிகளை கௌரவப்படுத்தும் வகையிலும் தனது 2 பேரக் குழந்தைகளுக்கு விக்ரம், பிரக்யான் என்று பெயர் சூட்டியுள்ளார்.

சந்திரயான் 3 வெற்றி: மகிழ்ச்சியில் 2 பேரக் குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய தாத்தா - என்ன பெயர் தெரியுமா? | Naming 2 Children Vikram And Pragyan I

அந்த வகையில் தனது மூத்த மகன் பாலப்பா-நாகம்மா தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு 'விக்ரம்' என்றும், தனது மற்றொரு மகன் நிங்கப்பா-சிவம்மா தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு 'பிரக்யான்' என்றும் பெயர் வைத்துள்ளார். இதுகுறித்து மெய்யப்பன் கூறுகையில் 'நிலவை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வு செய்து வருகிறது.

இதற்காக நமது இந்திய விஞ்ஞானிகள் கடும் பாடுபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையிலும், விஞ்ஞானிகளை கௌரவப்படுத்தும் விதமாகவும் எனது மூத்த பேரனுக்கு விக்ரம் என்றும், 2-வது பேரனுக்கு பிரக்யான் என்றும் பெயர் சூட்டியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.