அதிமுக கூட்டணியின் புதிய பெயர் - ஜெயக்குமார் சொன்ன பாயிண்ட்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையப்போகும் கூட்டணிக்கு புதிய பெயர் வைக்கப்படுமா? என்ற கேள்விக்கு ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
பரபரப்பாகும் தேர்தல் களம்
வரும் நாடாளுமன்ற தேர்தல் பல்வேறு வகையில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. மத்தியில் மட்டுமின்றி தற்போது அதிமுகவின் திடீர் முடிவில் தமிழகத்திலும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் வெளியேறிய பின்பு வலுவான ஒரு கூட்டணியை தமிழகத்தில் அமைக்கும் நெருக்கடியை அதிமுக எதிர்கொண்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக - இந்தியா கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக உருவாகும் கூட்டணி என மும்முனை போட்டி நிலவும் என்றாலும், இதில் நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டியிடுகிறோம் என அறிவித்துள்ள நிலையில், பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் குறித்து பல்வேறு கேள்விகள் எழுத்து வரும் நிலையில், இன்று ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
கூட்டணிக்கு புதிய பெயர்
இன்று சி பா ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு மரியாதை செய்தார் அதிமுகவின் மூத்த தலைவர் ஜெயக்குமார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கூட்டணி குறித்து கேள்விகள் கேட்கப்பட்ட போது, கூட்டணி குறித்து தான் மேற்கொண்ட எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என கூறிய ஜெயக்குமார், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில், அதனை பற்றி மேற்கொண்டு தான் கருத்து தெரிவிக்கவில்லை என்றார்.
தொடர்ந்து அவரிடம் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு புதிய பெயர் வைக்கபடுமா கூட்டணியில் யார் யார் இணைவார்கள்? போன்ற அடுத்தடுத்த கேள்விகள் எழுப்பப்பட்ட போது, தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கும் சூழலில் அதுபற்றி தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும் என தெரிவித்து சென்றார்.