கணவர் முருகனுக்கு பரோல் வழங்க கோரி நளினி மனு..!

Government of Tamil Nadu
By Thahir May 28, 2022 08:39 PM GMT
Report

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனுக்கு பரோல் வழங்க கோரி நளினி சிறைத்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பெண்க்ள தனிச்சிறையில் இருந்து நளினி தற்போது பரோலில் வெளியே இருந்து வருகிறார்.

கணவர் முருகனுக்கு பரோல் வழங்க கோரி நளினி மனு..! | Nalini Petitions For Parole For Husband Murugan

அவருக்கு 5வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. நளினி தனது தாயார் பத்மாவுடன் வேலுார் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் தங்கியுள்ளனர்.

நளினியை அவரது வழக்கறிஞர் புகழேந்தி நேற்று மாலை சந்தித்து பேசினார்.முன்னதாக அவர் வேலுார் ஆண்கள் சிறையில் உள்ள முருகனையும் சந்தித்து பேசினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் புகழேந்தி, பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை அடுத்து மீதம் உள்ள 6 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு கடந்த வாரம் ஆலோசனை நடத்தியது.

ஒரு வாரம் ஆன நிலையில் எந்த வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில் 6 பேரின் விடுலை தாமதமாக வாய்ப்புள்ளதால் நளினியின் கணவர் முருகனுக்கு 6 நாள் அவசர கால பரோல் விடுப்பு வழங்ககோரி நளினி சிறைதுறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

முருகன் பரோல் விடுப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 1 ஆம் தேதி மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும்,

6 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகன் விடுதலை தொடர்பாக மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.