‘’குடும்பம் பலிகடாவாகும்போது கவலையாக உள்ளது’’ : சமந்தா-நாக சைத்தன்யா விவாகரத்து குறித்து முதன்முறையாக பேசிய நாகர்ஜுனா

samantha divorce nagachaitanya nagarjuna
By Irumporai Jan 24, 2022 08:06 AM GMT
Report

தெலுங்கு சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் நாகார்ஜுனா. இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் தெலுங்கு மொழியில் மட்டுமில்லாமல் தமிழ், பாலிவுட் என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

அதோடு இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும், நாகர்ஜுனா அவர்கள் லக்ஷ்மி ராமா நாயுடு என்பவரை 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவருடைய மகன் தான் நாக சைதன்யா. தற்போது தெலுங்கு சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக நாக சைதன்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் சமந்தாவை நீண்ட காலமாக காதலித்து வந்தார். பின் இருவரும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

தென்னிந்திய சினிமா உலகில் சிறந்த ஜோடிகளாக இருவரும் திகழ்வார்கள் என்று அனைவரும் எதிர் பார்த்தார்கள். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள்.

இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அதுமட்டும் இல்லாமல் கடந்த ஆண்டு முழுவதும் இவர்களுடைய விவாகரத்து குறித்த சர்ச்சை தான் சோசியல் மீடியாவில் அதிகம் இருந்தது.

இன்னும் கூட இவர்களுடைய விவாகரத்து குறித்து பல வதந்திகளும் சர்ச்சைகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் தெலுங்கில் பங்கர் ராஜு என்ற திரைப்படம் நாக சைத்தன்யா மற்றும் நாகர்ஜுனா இருவரும் சேர்ந்து நடித்துள்ளார்கள்.

படமும் ரிலீஸ் ஆகி அமோக கலெக்ஷனை பெற்றுள்ளது. இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நாகர்ஜுனா பேசும்போது, விவாகரத்து விஷயத்தில் நாக சைத்தன்யா அமைதியாக இருந்ததை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

அவர் ஒரு வார்த்தை கூட எதுவும் பேசாமல் கவனமாக இருந்தார். எல்லோரையும் போலவே நானும் அவரைப் பற்றி கவலைப்பட்டேன், ஆனால் நான் அவரைப் பற்றி கவலைப்படுவதை விட அவர் என்னைப் பற்றி கவலைப்பட்டு இருந்தார் என்று கூறியிருந்தார்.

மேலும்,"ஊடகங்கள் என்னைப் பற்றி எதிர்மறையாக எழுதுவதற்கு எனது குடும்பம் பலிகடாவாகும்போது கவலையாக உள்ளதாக நடிகர் நாகார்ஜுனா கூறினார்.

அவர் பேசியதை கேட்ட ரசிகர்கள் தனது மகன் அமைதியாக இருந்ததாகவும், சமந்தா தான் விவாகரத்து குறித்து அதிகம் பேசி வருகிறார் என நாகர்ஜுனா மறைமுகமாக கூறியிருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.