‘’கடலினில் மீனாக இருந்தவள் நான் உனக்கென கரை தாண்டி வந்தவள் தான் ‘’ - சமந்தா நாக சைதன்யாவுக்கு மீண்டும் காதலா?
பிரபல நடிகர்களான சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்து அறிவிப்பு சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சமந்தா குறித்து சர்ச்சைக்கருத்துகளும் பரவத் தொடங்கின. சமந்தாவும் இதற்குத் தொடர்ச்சியாக பதிலடி கொடுத்து வந்தார்.
கடந்த சில நாட்களாகவே அமைதியாக் இருந்த சமந்தா நாக சைதன்யா விவகாரத்து விவகாரம் தற்போது மீண்டும் இன்ஸ்டா பதிவின் மூலம் பேசத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது முதன்முறையாக நேற்று இன்ஸ்டாகிராம் பதிவொன்றை செய்துள்ளார். அதில் ஹாலிவுட் நடிகர் மேத்யூ மேக்னாக்கி எழுதிய க்ரீன் லைட்ஸ் என்னும் புத்தகத்தைப் பற்றி பதிவிட்டுள்ளார்.
‘வாழ்க்கைக்கான காதல் கடிதம். இந்த புத்தகம்தான் எனக்கான கீரீன் சிக்னல் (A love letter to life .. thank you @officiallymcconaughey for sharing your journey .. this read is a green light for me .. respect sir)’ எனப் பதிவிட்டுள்ளார்.
தற்போது சென்னையில் வசித்து வரும் சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் அவை தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.