ஹைதராபாத் போலீசாரிடம் சிக்கிய நாகசைதன்யா - ரசிகர்கள் அதிர்ச்சி - வைரலாகும் புகைப்படம் - நடந்தது என்ன?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார்.
கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயரான நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா. இதன் பின்பு, இருவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாக சைதன்யா கடந்த ஏப்ரல் 12ம் தேதி, ஐதராபாத்திற்கு தன்னுடைய டொயோட்டா வெல்ஃபையர் காரில் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது, ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் நாகசைதன்யா காரில் வந்துக்கொண்டிருந்தபோது, போலீசார் அவரின் வாகனத்தை தடுத்து நிறுத்தினார்கள்.
காரின் கண்ணாடியில் கருப்பு நிற ஃபிலிம் ஒட்டி உள்ளே இருப்பவர் வெளியே தெரியாதபடி இருந்தது. ஐதராபாத்தில் டின்டட் வின்டோஸ் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.
இதனையடுத்து, நாகசைதன்யாவுக்கு போலீசார் ரூ.700 அபராதம் விதித்தனர். தற்போது, போலீசாருடன் நாகசைதன்யா இருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதே காரணத்திற்காக கடந்த வாரம் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மோட்டார் வாகன சட்டப்படி வாகனங்களில் கருப்பு நிற ஃபிலிம் ஒட்டுவதற்கு அனுமதி கிடையாது. நிர்பயா வழக்கிற்கு பிறகு வி.ஐ.பி.க்களை தவிர வேறு யாரும் டின்டட் வின்டோஸ் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.