கடன் வாங்கி, நகைகளை அடகு வைத்து உதவிய மயில்சாமி... - கண்டித்த நண்பர்கள்... - அறியாத தகவல்...!
நகைச்சுவை நடிகர் மயில்சாமி
தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் மயில்சாமி. கடந்த சனிக்கிழமை சிவராத்திரி பூஜையில் ட்ரம்ஸ் சிவமணியுடன் இணைந்து கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தார்.
கோயிலுக்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலைக்கு இல்லம் திரும்பிய மயில்சாமி, காலை 4 மணிக்கு இட்லி சாப்பிட்ட பிறகு, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மயில்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மயில்சாமியின் இறப்பு தமிழ் சினிமாத்துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சினிமாத்துறையினரும், ரசிகர்களும் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மயில்சாமி இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, எம்.ஜி.ஆர் பாடல்கள், மேளதாளத்துடன் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வடபழனி ஏவிஎம் மயானத்தில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.
ஏழைகளுக்கு உதவிய மயில்சாமி
மயில்சாமி உயிரிழந்தாலும், அவர் செய்த தான தர்மங்களும் அவரின் பெயர் என்றும் சொல்லும். மயில் சாமி தான் வசித்து வந்த சாலிகிராமம் பகுதி மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வந்துள்ளார். சென்னையில் கனமழை வெள்ளம் பாதிக்கப்பட்ட சாலி கிராம மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். தன் வீட்டின் அருகிலேயே சமைத்து பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று உணவு வழங்கியுள்ளார்.
கொரோனா பரவல் காலத்தில், மக்கள் பலருக்கு உணவுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்துள்ளார் மயில்சாமி. சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களை வீடு தேடி சென்று கொடுத்துள்ளார்.
கையில் இருந்த பணம் எல்லாம் செலவான போதும்கூட, கடன் வாங்கியும், வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்தும் ஏழை மக்களுக்கு உதவி செய்துள்ளார். அடகு வைத்த நகைகளை சமீபத்தில் தான் மயில்சாமி மீட்டுள்ளார்.
இவர் காசை தண்ணீர் போல செலவு செய்வதை பார்த்த சிலர் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். கடன் வாங்கி உதவி செய்ய வேண்டுமா என மயில்சாமியிடம் கேட்டுள்ளனர்.
தனக்கு அறிவுரை வழங்கியவர்களிடம் மயில்சாமி பேசும்போது, நான் இருக்கும்வரை என்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்வேன். நான் வந்தபோது எதையும் எடுத்து வரவில்லை. போகும்போதும் எதையும் கொண்டு செல்லப் போவதில்லை. அதனால் உதவி செய்ய கணக்கு பார்க்க மாட்டேன் என்றாராம்.

சரிகமப- வில் நடுவருக்கு போட்டியாளர் கொடுத்த பரிசு... அரங்கத்தையே சிரிப்பில் ஆழ்த்திய தருணம்! Manithan
