கருப்பை அறுவை சிகிச்சை வந்த பெண்ணின் 2 சிறுநீரகத்தை திருடிய மருத்துவர் - அதிர்ச்சி சம்பவம்...!

India Bihar
By Nandhini Nov 17, 2022 12:13 PM GMT
Report

பீகாரில் ஒரு பெண்ணின் 2 சிறுநீரகத்தை மருத்துவர்கள் திருடிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

2 சிறுநீரகத்தை திருடிய மருத்துவர்

பீகாரைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த சுனிதா தேவி என்ற 38 வயது கொண்ட பெண் கருப்பை அறுவை சிகிச்சைக்காக முசாபர்பூரில் உள்ள  மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்ய வந்த மருத்துவர் பெண்ணின் 2 சிறுநீரகங்கள் அகற்றி திருடியுள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பெண், என் சிறுநீரகத்தை திருடிய மருத்துவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அம்மாநில அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மேலும், நான் உயிருடன் வாழ  அவர்களது சிறுநீரகங்களை மாற்று அறுவை சிகிச்சை மூலம் எனக்கு வழங்க வேண்டும். இப்படி செய்யவில்லையென்றால், பேராசை பிடித்த மருத்துவர்கள் ஏழைகளின் உயிருடன் விளையாடுவார்கள் என்று தெரிவித்தார். 

muzaffarpur-bihar-kidney-doctors-stealing-doctors

மருத்துவர்கள் கைது

இதற்கிடையில், பெண்ணின் சிறுநீரகத்தை திருடிய மருத்துவர் தலைமறைவானார்கள். போலீசாரின் தீவிர வேட்டையின் பிறகு 2 சிறுநீரகங்களை திருடிய மருத்துவர் பாவன் மற்றும் மருத்துவமனையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அப்பெண்ணிற்கு தினசரி டயாலிசிஸ் செய்யவில்லை என்றால் அது உயிருக்கு ஆபத்தை விளைவித்துவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.