இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மீது போலீசில் பரபரப்பு புகார் - ரசிகர்கள் அதிர்ச்சி

Complaint A.R.Rahman ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள்அதிர்ச்சி music-director report-to-police fans-were-shocked இசையமைப்பாளர் போலீசில்புகார்
By Nandhini Apr 13, 2022 08:17 AM GMT
Report

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பாரளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், இந்தி பேசாத மாநிலங்களும் இனி இந்தி பேச வேண்டும. ஆங்கிலத்துக்கு மாற்றான மொழியாக இந்தியை கொண்டு வரும் நேரம் வந்து விட்டது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை பேச வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, சமூகவலைத்தளங்களில், மாநில மொழிகள் பற்றிய உரிமை குறித்து பல்வேறு நபர்கள், மத்திய அரசுக்கு எதிராக தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

இதற்கிடையில், இந்தி திணிப்புக்கு எதிராக இசைப் புயல் ஏ.ஆர். ரகுமானும் உரத்த குரல் கொடுத்தார். இது இந்தி திணிப்புக்கு எதிரான முழக்கமாக வலுப்பெற்றிருக்கிறது.

இதனையடுத்து, கடந்த 8ம் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழணங்கு என்ற தமிழ்த் தாய் படத்தை பகிர்ந்தார்.

அந்த புகைப்படத்தில், தமிழ்த்தாய் கையில் வேலுடன் ஆக்ரோஷமாக காட்சி தருகிறார். அந்த வேலின் முனையில் தமிழின் சிறப்பு எழுத்தான "ழ" இடம் பெற்றுள்ளது. தமிழ்த் தாயின் கீழே, பாரதிதாசன் எழுதிய "இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு உரிமைச்செம் பயிருக்கு வேர்" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ளது. இந்த ஓவியம் பார்க்கவே படு ஆக்ரோஷமாக காட்சி தருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த டிவீட் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில், நேற்று சென்னையில் வசிக்கும் முத்து ரமேஷ் என்பவர் ஏ.ஆர்.ரகுமான் மீது ‘ஆன்லைன்’ வாயிலாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் ஒன்று கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் -

இழிவாக வரையப்பட்ட தமிழன்னையின் படத்தை, சமூகவலத்தளத்தில் வெளியிட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல நாடுகளில் வாழும் தமிழகர்கள், தமிழன்னைக்கு கோவில் கட்டி தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். தமிழறிஞர்கள் தமிழன்னையின் படங்களை அழகாக, தெய்வமாக ஓவியம் வரைந்து வெளியிட்டுள்ளனர்.

ஆனால், ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட தமிழன்னை ஓவியம் தலைவிரி கோலத்துடன் உள்ளது. இது உலகத்தின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களை கொச்சைப்படுத்தும் செயல். எனவே, சட்டரீதியாக ஏ.ஆர்.ரகுமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.