நெல்லை அருகே மனைவியை கிரிக்கெட் பேட்டால் அடித்துக்கொலை - வெறியாட்டம் ஆடிய கணவன் - நடந்தது என்ன?
நெல்லை அருகே குடும்ப தகராறில் மனைவியை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொடூரமாக கொன்ற லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், பழவூர் தெப்பக்குள தெருவைச் சேர்ந்தவர் சுடலையாண்டி. இவர் லாரி ஓட்டுநர். இவரது மனைவி ஜெயலட்சுமி (36). இவர்களுக்கு 3 பிள்ளகைள் இருக்கிறார்கள்.
இதனிடையே, ஜெயலட்சுமிக்கு, வேறு ஒரு நபருடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் சுடலைபாண்டியனுக்கு தெரியவந்தது. இதனால், இவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இந்த விவகாரம் தொடர்பாக ஜெயலட்சுமிக்கும், சுடலையாண்டிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதனால், ஆத்திரமடைந்த சுடலையாண்டி, கிரிக்கெட் மட்டையால் ஜெயலட்சுமியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த பழவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஜெயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சுடலையாண்டியை கைது செய்தனர். குடும்ப தகராறில் மனைவியை கணவன் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.