காதல் திருமணம் செய்த மகள்... - ஆத்திரத்தில் மருமகனை துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற மாமனார் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி
வேறு சாதிக்கார நபர், மகளை காதல் திருமணம் செய்ததால், ஆத்திரத்தில் மருமகனை மாமனார் துடிக்க துடிக்க சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
பீகார் மாநிலம், தும்ராவ்ன் கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் பதக். இவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது மகள் அதே ஊரைச் சேர்ந்த மோனு ராய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மோனு ராய் வேறு சாதியைச் சேர்ந்தவர். இதனால், தந்தையின் விருப்பம் இல்லாமல் ஒரு வருடத்திற்கு முன்பு மோனுராய்யை திருமணம் செய்து கொண்டார் மகள். மோனுராய்யும், அப்பெண்ணும் ஒன்றாக இணைந்து 1 வருடமாக சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
சுட்டுக் கொலை
தனு சலூன் கடையில், மோனு ராய் சீட்டில் வந்து அமர்ந்தார். முடி திருத்துநர் அவருக்கு முடி வெட்ட ஆரம்பித்தார். அப்போது, திடீரென கடைக்கு வந்த சுனில் பதக் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மோனு ராய்யை சுட்டார். அலறிப்போன முடி வெட்டுபவர் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டார். செய்வது அறியாமல் திகைத்த மோனு ராய் தப்பிக்க முயற்சி செய்தார். அவரைப் பிடித்து, காலால் உதைத்து துன்புறுத்தினர். பின்னர், பெண்ணின் தந்தையும், அண்ணனும் சேர்ந்து சராமரியாக அடித்து, துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.
பின்னர், காவல் நிலையம் சென்று சுனில் சரணடைந்தார். அவர் மகன் மட்டும் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மகனை தேடி வருகின்றனர்.
இது குறித்த சிசிடிவி காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியை திகைத்துள்ளனர்.
अंतरजातीय विवाह करने की मोनू राय को उनके ससुर रिटायर्ड फ़ौजी ससुर सुनील पाठक ने अपने बेटे के साथ बक्सर ज़िले के डुमरांव में गोली मार कर हत्या कर सजा दी और बाद में खुद एसपी को फ़ोन कर सरेंडर भी किया @ndtvindia @Anurag_Dwary pic.twitter.com/VDzhUjmHcx
— manish (@manishndtv) June 7, 2022